எலி கடித்து 40 நாள் பச்சிளங்குழந்தை பரிதாப பலி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!

 
Telangana

தெலுங்கானாவில் பிறந்து 40 நாட்களே ஆன பிஞ்சு குழந்தை, எலி கடித்து மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டம் நாகனூல் கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி லட்சுமி கலா. இந்த தம்பதிக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகளாகும் நிலையில், கடந்த மாதம் ஆண் குழந்தை நலமுடன் பிறந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை கொண்டு வந்தது.

baby

அன்பு குழந்தையுடன் லட்சுமி கலா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு குழந்தையின் முகத்தில் எலி ஏறி மூக்கை கடித்துள்ளது. இதையடுத்து அருகே இருந்த மருத்துவமனையில் மருந்து பெற்று காயத்திற்கு தடவி வந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் ஊடுருவிய எலி மீண்டும் குழந்தையின் மூக்கின் மேல் இருந்த காயத்தில் கடித்தில் ரத்தம் சொட்டியுள்ளது. குழந்தை அலறிய நிலையில், ஐதராபாத்தில் உள்ள நீலோபர் தாய் சேய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Niloufer Hospital

வலியில் தொடர்ந்து கதறிய பிஞ்சு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. பாதுகாப்பாக கவனிக்காததால் நமது உள்ளங்கை அளவில்லாத எலி பச்சிளங் குழந்தையின் உயிரை பறித்தது பெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

From around the web