நடுரோட்டில் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட 19 வயது கல்லூரி மாணவி!! பெங்களூரில் பயங்கரம்

 
Rashi

கர்நாடகாவில் கல்லூரி முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த மாணவி, கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தலை காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கல்லூரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

பெங்களூரு அடுத்த சண்போகநஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஷி (19). இவர் ஏலஹங்கா கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ படித்து வந்தார். நேற்று, கல்லூரி முடிந்து பேருந்தில் திப்பூர் வந்து இறங்கி, வழக்கம்போல வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது, பைக்கில் வந்த இரு வாலிபர்கள் ராஷியை வழிமறித்து, தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ராஷியின் கழுத்தை அறுத்து, ரத்தவெள்ளத்தில் ராஷியை அங்கேயே விட்டுத் தப்பிச்சென்றனர்.

murder

இதில், ரத்தவெள்ளத்தில் துடிதுடித்துக் கிடந்த ராஷியை அக்கம் பக்கத்தினர் மீட்பதற்குள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து, ராஜனுகுந்தே பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையின் பின்னணியில் காதல் விவகாரம் உள்ளதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Rashi

இது குறித்து போலீசார் கூறுகையில், “கல்லுாரி மாணவி கொலைசெய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. காதல் விவகாரத்தால் கொலை நடந்ததா என்ற கோணத்தில் விசாரிக்கிறோம். அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து, தப்பியோடிய குற்றவாளிகளைத் தேடிவருகிறோம். ராஷியின் மொபைல் போன் அழைப்புகளை ஆய்வுசெய்து, அவரின் நண்பர்களிடமும் விசாரிக்கிறோம்” என்றனர்.

From around the web