12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது.. டெல்லியில் பயங்கரம்!

 
Rape

டெல்லியில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியின் சதர் பஜாரில் சுரேஷ் குமார் (38) என்பவர் டீ விற்பனை செய்து வருகிறார். இவரது கடையில் 12, 14 மற்றும் 15 வயதுடைய மூன்று சிறுவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் புத்தாண்டைக் கொண்டாட ஒரு பெண்ணை ஏற்பாடு செய்யும் படி தனக்குத் தெரிந்த பெண்ணிடம் சுரேஷ் குமார் கூறியுள்ளார்.

அப்போது பவானா பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான 12 வயது சிறுமியை அந்த பெண் தொடர்பு கொண்டுள்ளார். அந்த சிறுமி கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரைத் தொடர்பு கொண்ட பெண், கழிவுகளை அகற்ற வேண்டும் என்று தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சுரேஷ்குமார், அவரது டீ கடையில் வேலை செய்த மூன்று சிறுவர்கள் இருந்துள்ளனர்.

Rape

அங்கு வந்த சிறுமியை அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமடைந்த அந்த சிறுமி, தனக்கு நடந்த கொடூரச் சம்பவத்தை வெளியே சொல்லவில்லை.

ஆனால், அவருக்குள் ஏற்பட்ட மனநெருக்கடி காரணமாக தனது உறவினரிடம் கூறியுள்ளார். அவர் சிறுமியின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் காவல் நிலையத்திற்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். அங்கு தனக்கு நடந்த கொடுமையை போலீசாரிடம் சிறுமி கூறியுள்ளார். கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று காவல்துறையை சிறுமி அணுகியபோது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

arrest

இதையடுத்து சுரேஷ்குமார், அந்த பெண், மூன்று சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “தனக்குத் தெரிந்த உறவினர் என நம்பிச் சென்ற சிறுமியை 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர் கூலித்தொழிலாளர்கள் ஆவர். வேலைக்காக தங்களது மகளை அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றனர்.

From around the web