இந்தியா முழுவதும் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 100 பேர் டிஸ்சார்ஜ்!

 
ICV

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,35,254 ஆக அதிகரித்துள்ளது.

Corona India

கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,568 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 100 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,45,00,969 பேர் குணமடைந்துள்ளனர்.

நேற்று வரை 748 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 717 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

India-corona

இதுவரை மொத்தம் 93,58,79,495 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை 220.68 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

From around the web