வேண்டும் வேண்டும்! தமிழில் முழக்கமிட்ட வட இந்திய எம்.பி.க்கள்!!

தொழிலதிபர் அதானி மீதான் குற்றச்சாட்டுகளை பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாராளுமன்ற நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாராளுமன்றத்திற்குள் எம்.பி.க்கள் கோரிக்கை எழுப்பிய போது பாஜகவினர் கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியதால் அவை ஒத்திவைப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பாராளுமன்ற நுழைவாயிலில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியா அணி எம்.பி.க்கள் ஒன்று திரண்டனர்,
மோடியும் அதானியும் ஒன்று என்ற பதாகையை ஏந்தியபடி பாஜக அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர் எம்.பி.க்கள். திமுக எம்.பி. திருச்சி சிவா முழக்கம் செய்யத் தொடங்கியதும் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல மற்ற எம்.பி.க்கள் அதையே திருப்பி முழக்கமிட்டனர். பின்னர் தடாலடியாக தமிழில் “வேண்டும் வேண்டும் விசாரணை வேண்டும்” என்று திருச்சி சிவா முழக்கமிட்டார்.
வேண்டும் வேண்டும் என்று சிவா முழங்க மற்ற எம்.பி.க்களும் வேண்டும் வேண்டும் என்று திரும்பவும் முழங்க, விசாரணை வேண்டும் என்று சிவா கூறவும் அதையே மற்றவர்களும் திருப்பிச் சொன்னார்கள்.
பாராளுமன்ற வளாகத்தில் இந்த தமிழ் முழக்கத்தைக் கேட்கவே காதுகளுக்கு இனிமையாக இருக்கிறதல்லவா!
திருச்சி சிவா வட இந்திய எம்பிக்களையும் தமிழிலேயே கோஷம் போட வைச்சது செம. pic.twitter.com/DMS8s9Jr4f
— ஜெயராமன் திமுக (@jayaraman418) December 3, 2024