கொடுத்த கடனை கேட்க வீடு தேடி வந்த பெண்.. கல்லாலேயே அடித்து கொன்ற கணவன் - மனைவி.. திட்டக்குடியில் பயங்கரம்

 
Tittakudi

திட்டக்குடி அருகே கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட பெண்ணை, கணவன் - மனைவி அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வசிஷ்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி மகாலட்சுமி (40). இவரிடம், அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ரூ.9.60 லட்சம் கடன் வாங்கி இருந்தார். கடனை திருப்பி தராததால் நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு, மகாலட்சமி, அவரது தம்பி தர்மராஜ் (38), தாய் மலர் (55) ஆகியோர் முருகன் வீட்டிற்கு சென்று கடன் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டனர்.

dead-body

அப்போது தகராறு ஏற்பட்டு, கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அவர்களை கல்லால் தாக்கியுள்ளனர். அதில், காயமடைந்த மலர், முருகன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி தன்னை தாக்கியதாக திட்டக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Tittakudi PS

தொடர்ந்து அவர் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, மேல் சிகிச்சைக்காக பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மலர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,  கணவன்-மனைவியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web