பல்கலைக்கழக விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. ராகிங் கொடுமையால் விபரீதம்!!

 
WB

மேற்கு வங்கத்தில் சீனியர் மாணவர்களின் ராகிங்கால் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஹன்ஸ்காலி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வப்னாதிப். இவர் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக மாணவர் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்த நிலையில், அதே விடுதியில் தங்கி இருந்த சீனியர் மாணவர்களில் சிலர் ஸ்வப்னாதிப்பை ராகிங் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

jump

இதில் மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த 9-ம் தேதி விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்திருக்கிறார்.

கடந்த 9-ம் தேதி காலை ஸ்வப்னாதிப் தனது தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பயமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். “நீங்க சீக்கிரம் வாருங்கள். உங்களிடம் சொல்ல நிறைய விஷயங்கள் உள்ளன” என்றும் பேசியுள்ளார். இந்த நிலையில் தான் அவர் அன்று இரவே விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரிழந்திருக்கிறார்.

arrest

இந்த சம்பவம் தொடர்பாக 2ம் ஆண்டு மாணவர் தீப்சேகர் தத்தா மற்றும் 2ம் ஆண்டு மாணவர் மனோதோஷ் கோஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக இந்த விவகாரத்தில், பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சவுரப் சவுத்ரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர். இவர் 2022ம் ஆண்டு கணிதத்தில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தவர். முன்னாள் மாணவர் சவுத்ரி சட்டவிரோதமாக விடுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

From around the web