அதிர்ச்சி.! ப்ளஸ்-2 மாணவர் தற்கொலை.. காதல் விவகாரம் காரணமா? போலீசார் விசாரணை!!

 
salem

பெத்தநாயக்கன்பாளையம் அருகே ப்ளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே செக்கடிப்பட்டி அர்ஜுன தெருவில் வசித்து வருபவர் நாகராஜன். இவரது மகன் விஷ்வா (17). விஷ்வாவின் பெற்றோர் மும்பையில் வேலை செய்து வருவதால், தனது தாத்தாவான கிருஷ்ணன் என்பவருடன் மாணவர் தங்கி வந்துள்ளார். 

Suicide

இவர், பேளூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இவர் பெத்தநாயக்கன்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள தனது அத்தை மணி என்பவரின் வீட்டிலும் தங்கி அவ்வப்போது பள்ளிக்கு சென்று வந்துள்ளார். 

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் செக்கடிப்பட்டியில் உள்ள தனது வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏத்தாப்பூர் போலீசார், மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Yethappur PS

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை நடைபெற்ற ப்ளஸ்-2 தேர்வுகளை அந்த மாணவர் எழுதி உள்ள நிலையில், திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டதால், அவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் ஏத்தாப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

From around the web