பித்தளை அண்டாவிற்குள் அழுகிய நிலையில் பெண் சடலம்... பாட்டியை கொன்ற பேத்தி.. தஞ்சாவூரில் பயங்கரம்!!

 
Thanjavur

தஞ்சாவூர் அருகே பூட்டிய வீட்டில் இருந்த பித்தளை அண்டாவில் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை கரைமேடு தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி (55). இவரது கணவர்  சீனிவாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார். இந்த நிலையில் செல்வமணி தனியாக வசித்து வந்தார். இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் இருக்கின்றனர். இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்கள். 

மூன்று மகள்களுக்கு திருமணமாகி கணவர் வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் ஒரு மகள் கீதா வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி முதல் அடுத்த நாள் வரை செல்வமணியின் வீடு பூட்டி இருந்தது. அவர் வேறெங்கும் செல்ல வாய்ப்பு இல்லாததால் இதனை கண்ட அப்பகுதியினர் சந்தேகமடைந்து செல்வமணி மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர்.

jayalaxmi

அன்று மாலை செல்வமணியின் வீட்டுக்கு வந்த ராஜலட்சுமி பூட்டி இருந்த கதவின் ஓரம் நின்று சோதனையிட்டார். அப்போது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். படபடப்பான ராஜலட்சுமி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். அப்போது, தாய் செல்வமணி பித்தளை குண்டானில் தலைகீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாபநாசம் போலீசார் செல்வமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, செல்வமணியின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, செல்வமணியின் பேத்தியான ஜெயலட்சுமி (28) மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர் செல்வமணியின் மற்றொரு மகளான கீதாவின் மகள். திருமணமாகி கணவர் ரமேஷுடன் வீரசிங்கம்பேட்டையில் வசித்து வருகிறார். 

Papanasam PS

இந்நிலையில், கீதா வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் தாய் செல்வமணிக்கு ,மாதா மாதம் காசு அனுப்பி கொண்டிருந்தார். இது ஜெயலட்சுமிக்கு பிடிக்கவில்லை. இதனால், தனது பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி செல்வமணியின் வீட்டுக்கு சென்ற ஜெயலட்சுமி மீண்டும் தகராறு செய்துள்ளார்.

அப்போது, ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கீழ தள்ளியுள்ளார். இதில் செல்வமணியின் தலை படுகாயமடைந்து ரத்தம் கசிந்துள்ளது. இருப்பினும், ஜெயலட்சுமி செல்வமணியை சேலையால் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்துவிட்டு, உடலை தலை குப்புற பித்தளை குண்டானுக்குள் அமுக்கி வைத்துவிட்டு தப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஜெயலட்சுமியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web