குடிபோதையில் தகராறு.. கணவனை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண்.. சென்னையில் பரபரப்பு

 
Chennai

பூந்தமல்லி அருகே குடித்து விட்டு தகராறு செய்த கணவரை மனைவியே கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30). இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் (8) என்ற மகன் உள்ளார்.

Murder

சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன், மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்த கத்தியால் கணவரின் வயிற்றில் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நசரத்பேட்டை போலீசார், சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Nazarathpettai PS

இதையடுத்து நசரத்பேட்டை போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கணவனை குத்திக்கொலை செய்த மங்களலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web