திருக்கழுக்குன்றம் அருகே ஏரியில் சிதறி கிடந்த மனித எலும்புக்கூடு... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது அம்பலம்!!

 
thirukkalukunram

திருக்கழுக்குன்றம் அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்றது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் ஏரியின் அருகில் உள்ள நில பகுதியில் மனித எலும்புகள் சிதறி கிடந்தன. அந்த பகுதியில் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற சிலர் மனித எலும்பு கூடு சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் சிதறி கிடந்த எலும்புகளை சேகரித்து மனித எலும்புகள்தான் என்று உறுதி செய்தனர். இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் ஆகியோருக்கு தகவல் அளித்தனர்.

murder

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் விசாரணை மேற்கொண்டார். மனித எலும்புகளை சேகரிக்கும்போது அந்த பகுதி அருகில் உள்ள ஏரியில் இருந்து துர்நாற்றம் வீசுவது தெரியவந்தது. அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 2 அடி பள்ளத்தில் மண்டை ஓடு ஒரு பக்கவாட்டில் நொறுங்கிய நிலையிலும் மனித தலை மார்பக எலும்பு உள்ளிட்ட உடல் பாக எலும்புகள் மற்றும் துணிகள் கிடந்ததை கண்ட போலீசார் மருத்துவர் உதவியுடன் எலும்புகளை சேகரித்து பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனித எலும்பு கூடுகள் இருந்த இடத்தில் ஆண் அணியும் துணிகளும், பெண்கள் அணியும் துணியும் கிடந்ததால் இறந்து போனது ஆணா, பெண்ணா என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் எலும்புக்கூடாக கிடந்தவர் திருக்கழுக்குன்றம் அடுத்த மாதுளங்குப்பத்தை சேர்ந்த சந்திரன் (35) என்பது தெரியவந்தது. அவரது மனைவி சித்ரா (26) கள்ளக்காதலன் சக்திவேலுடன் சேர்ந்து சந்திரனை கொலை செய்து அந்த பகுதியில் புதைத்தது தெரியவந்தது.

Thirukalukundram PS

சந்திரன், சித்ரா தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருந்த நிலையில் திருக்கழுக்குன்றம் அடுத்த வெள்ளப்பந்தல் கிராமத்தில் உள்ள ஒருவரிடம் விவசாய வேலை செய்துகொண்டு வயல்களை பார்த்துக் கொண்டு அங்கேயே சித்ரா தங்கியிருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டை அடுத்த மையூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

சக்திவேல் அடிக்கடி சித்ராவை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதை சந்திரன் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சக்திவேலும், சித்ராவும் சேர்ந்து சந்திரனை கொலை செய்து அருகில் உள்ள ஏரியில் புதைத்து விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. போலீசார் சித்ராவையும், சக்திவேலையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web