விஜய் ஆண்டனி மகள் தற்கொலை.. இல்லத்தில் போலீசார் தீவிர விசாரணை!

 
vijay antony

நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது இல்லத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2005-ல் வெளியான ‘சுக்ரன்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து டிஷ்யூம், நினைத்தாலே இனிக்கும், நான அவன் இல்லை, பந்தயம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2012-ல் வெளியான ‘நான்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தன் குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மீரா மற்றும் லாரா ஆகிய இரண்டு மகள் உள்ளனர். இதிர் மூத்த மகள் மீரா தனியார் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் சற்று மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவர் உறங்கச் சென்றுள்ளார். இன்று அதிகாலை விஜய் ஆண்டனி தனது மகளின் படுக்கை அறைக்கு சென்று பார்த்த போது, தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Vijay Antony

பின்னர், வீட்டில் உள்ள பணியாளர் உதவியுடன் தனது மகளை மீட்டு உடனடியாக காவேரி மருத்துவமனைக்கு விரைந்து உள்ளார். அங்கு மருத்துவர்கள் மீராவை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளனர். இது தொடர்பாக ஆழ்வார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த மீராவின் உடலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நேற்று பள்ளி விடுமுறை நாள் என்பதால் மீரா அவரது தோழிகளை சந்திப்பதற்காக வெளியில் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

பின்னர், இரவு வீட்டிற்கு வந்து உணவு அருந்திவிட்டு படுக்கை அரைக்கு சென்றவர் இன்று அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மீரா கடந்த ஒரு வருட காலமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மன அழுத்தத்திற்கான ஆலோசனைகளையும், சிகிச்சையும் எடுத்து வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


அதன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகள் கொடுத்த மருத்துவரிடமும், நேற்று வெளியே சென்று சந்தித்த தோழிகளிடம் ஏதாவது கூறினாரா என்றும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் தடயவியல் நிபுணர்கள் விஜய் ஆண்டனி வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்களை சேகரித்து இது தற்கொலை தானா என்ன உறுதி செய்வதற்கு ஆய்வுகளை செய்து வருகின்றனர்.

மீரா விஜய் ஆண்டனி மறைவால் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், நடிகர் விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர், சந்தானம், குஷ்பு, அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட பிரமுகர்கள் விஜய் ஆண்டனியின் வீட்டிற்கு நேரில் சென்றும், மேலும் பல பிரபலங்கள் எக்ஸ் தளத்திலும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

From around the web