பிரபல இயக்குநர் ஆர்த்தி குமார் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்!

 
Arthi Kumar

பிரபல இயக்குநர் ஆர்த்தி குமார் உடல்நல குறைவால் காலமானார்.

2004-ல் வெளியான ‘சவுண்ட் பார்ட்டி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்த்தி குமார். இந்தப் படத்தில் சத்யராஜ், மறைந்த நடிகை பிரதியுஷா, வடிவேலு, இளவரசு, மணிவண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தின் காமெடி காட்சிகளை அவர் தான் எழுதியிருந்தார். குறிப்பாக வடிவேலுவின் வசனங்களும், காமெடி காட்சிகளும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

Arthi Kumar

தொடர்ந்து சத்யராஜ் மற்றும் பிரேமாவை வைத்து ‘அழகேசன்’ என்ற படத்தையும் இயக்கி இருந்தார். மேலும் ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பெரியார்’ குறித்த வரலாற்று படத்தில் ராஜாஜியாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் இயக்குநர் ஆர்த்தி குமார் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது சொந்த ஊர் நெல்லை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இயக்குநர் ஆர்த்தி குமாரின் இயற்பெயர் சுரேஷ்குமார் ஆகும்.

RIP

இவர் நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் ஹைகிரவுண்ட் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் ஆர்த்தி குமார் மறைவுக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

From around the web