மகன்களின் முழு பெயர் இதுதான்... குழந்தைகளின் போட்டோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. க்யூட்டா இருக்கே! ரசிகர்கள் மகிழ்ச்சி

தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டிருப்பதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா அவரது நீண்ட நாள் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். சென்னை அருகே மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
திருமணத்தை முடித்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்றுவிட்டு மீண்டும் தங்களது பணிகளில் மூழ்கினர். இதையடுத்து, கடந்த அக்டோபர் 9-ம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண்குழந்தைகள் பிறந்துள்ளதாக புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக அறிவித்தனர். திருமணம் முடிந்த நான்காவது மாதத்திலேயே இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து வாடகை தாய் விவகாரம் பூதாகரம் எடுத்தது.
ஏராளமான சட்ட சிக்கல்கள், விசாரணை நடைபெற்று கடைசியாக அரசு தரப்பில் வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்த விவகாரம் சட்டப்படி தான் என்ற பிறந்த தகவல் வெளியானது. எனவே, இவர்கள் உயிர். உலகம் எனக் குழந்தைகளுக்குப் பெயரிட்டு தங்கள் பெர்சனல் பக்கங்களை அவ்வளவாக வெளிப்படுத்தாமல், மீடியா வெளிச்சமின்றி தன் குழந்தைகளை வளர்த்து வருகின்றனர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார்.
Dear friends ❤️
— VigneshShivN (@VigneshShivN) April 3, 2023
We have named our blessings , our babies like this ❤️
#Uyir RudroNeel N Shivan
உயிர் ருத்ரோநீல் N சிவன்#Ulag Daiwik N Shivan
உலக் தெய்விக் N சிவன்
N stands for their best mother in the world #Nayanthara ❤️
Happiest & proudest moments of life #Blessed pic.twitter.com/r4RHp0wC8f
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன் என பெயரிட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். இதுவரை குழந்தைகளின் முகத்தை மறைத்தபடி இருக்கும் படங்களை பதிவிட்டுவந்த விக்னேஷ் சிவன், முதன்முறையாக குழந்தைகளின் முகம் தெரியும் படத்தை பதிவிட்டிருக்கிறார். இதில் N என்பது அவர்களுடைய சிறந்த அம்மாவான நயன்தாராவைக் குறிப்பதாக பதிவிட்டுள்ளார்.