பிரபல இளம் நடிகர் மாரடைப்பால் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

இளம் கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 39.
1996-ல் வெளியான ‘ஹலோ டாடி’ படத்தில் டாக்டர் விஷ்ணுவர்தனுக்கு மகனாக நடித்தவர், கன்னட நடிகர் நிதின் கோபி. இந்த படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து தேசிய அளவில் புகழ் பெற்றவர். அதனைத் தொடர்ந்து, முத்தினந்த ஹெந்தி, கேரளிடா கேசரி மற்றும் நிஷப்தா போன்ற முக்கிய கன்னட படங்களில் நடித்தார்.
மேலும் இயக்கம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடிப்பு என பல வடிவங்களில் தனது திறமையினைப் பார்வையாளர்களுக்குக் காட்டினார். இதில் ஸ்ருதி நாயுடு தயாரித்த ‘புனர் திருமண’ சீரியலும் அடங்கும். நல்ல டிஆர்பி காரணமாக இவருக்கு பக்தி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நிறைய வழங்கப்பட்டன. அவர் ‘ஹர ஹர மஹாதேவ்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நிதின் கோபி பெங்களூரின் இட்டமடுவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் நிதின். இவருக்கு திருமணமாகாத நிலையில் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று அதிகாலை 4 மணி அளவில் நிதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது, நிதின் வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரையுலகில் புல்லாங்குழல் வாசிப்பாளராக பிரபலமைடைந்த கோபியின் மகன் நிதின் கோபி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில், மாரடைப்பு காரணமாக கன்னட திரையுலகம் புனித் ராஜ்குமார், லக்ஷ்மண், மந்தீப் ராய், புல்லட் பிரகாஷ் உட்பட பல நடிகர்களை இழந்துள்ளது. இதுபோல் சம்பத் ராஜிவும் தற்கொலை செய்து கொண்டது நினைவுக்கூறக்தக்கது.