சிரஞ்சீவியை அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் மரணம்... திரையுலகினர் இரங்கல்

 
Chiranjeevi - Vasu

பிரபல தெலுங்கு இயக்குநர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 72.

1978-ல் முதன் முறையாக இயக்குநராக ‘பிரணம் கரிது’ என்கிற படத்தின் மூலம் அடி எடுத்து வைத்த கே.வாசு அந்த படத்தில் தான் முன்னணி நடிகர் சிரஞ்சீவியையும் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். சிரஞ்சீவியின் திறமையை வெளிக்கொண்டு வந்த அந்த படம், இயக்குநராக கே.வாசுவுக்கும் புதிய பாதை போட்டு தந்தது. 

KVasu

மேலும் கே.வாசு இயக்கிய ‘ஸ்ரீ சீரடி சாய்பாபா’ படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது. கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை டைரக்டு செய்துள்ளார். அது மட்டுமல்ல, இவர் ஏற்கனவே தெலுங்கு திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர் பிரத்தியகர்மாவின் மகனும் இயக்குநர் ஹேமம்பாரதர ராவின் சகோதரரும் ஆவார்.

கடந்த சில நாட்களாகவே சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த கே.வாசு ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 26-ம் தேதி காலமானார். தெலுங்கு திரை உலகத்தை சேர்ந்த பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் மறைவுக்கு நடிகர் சிரஞ்சீவி, தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “மூத்த இயக்குநர் கே.வாசு. அவர் இப்போது இல்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. என் திரையுலக பயணத்தின் ஆரம்ப நாட்களில் நான் செய்த பிராணம் கரிது, தொடடோங்காலு, அல்லுல்லு அண்ணுரு, கொத்தலா ராயுடு ஆகிய படங்களை இயக்கியவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று கூறியுள்ளார்.

From around the web