நன்றியும் அன்பும்.. திருமண உறவிலிருந்து வெளியேறுகிறேன்.. பிரபல நடிகை அறிவிப்பு!

 
Sheela

திருமண உறவில் இருந்து விலகுவதாக பிரபல நடிகை ஷீலா குமார் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2016-ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘ஆறாது சினம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷீலா. பரதநாட்டியக் கலைஞரான இவர், ’கூத்துப்பட்டறை’ மூலம் பல்வேறு மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து ‘டூலெட்’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை அவருக்கு பெற்றுத் தந்தது. அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Sheela

யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ படத்தில் தபால் அதிகாரி வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்றவர். அதனை தொடர்ந்து நல்ல கதாபாத்திரம் உள்ள வேடங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை, அசுரவதம், பேட்டைக்காளி இணைய தொடர், ஜோதி, பிச்சைக்காரன் 2, நூடுல்ஸ் இந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார்.

மோகன் ஜி இயக்கத்தில் திரௌபதி திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஜாதி திரைப்படம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது. பேட்டைக்காளி இணைய தொடரில் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். இவர் நடிப்பு பயிற்சி பள்ளி வைத்துள்ள சோழன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.


இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக நடிகை ஷீலா தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளார். தனது கணவரை டேக் செய்து தனது இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். மேலும் தனது கணவர் உடனான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஷீலா நீக்கியுள்ளார்.

From around the web