தேசிய விருது பெற்ற இயக்குநர் திடீர் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Durai

பிரபல இயக்குநர் துரை உடலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

1974-ல் வெளியான ‘அவளும் பெண் தானே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் துரை. அதனைத் தொடர்ந்து, ஒரு குடும்பத்தின் கதை, ஆசை 60 நாள், ரகுபதி, ராகவன் ராஜாராம், பசி, நீயா உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார்.

Pasi

அதில், 1979-ல் வெளியான ‘பசி’ படம், சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருக்கும். சிறந்த இயக்குநர், திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம். ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை. ஏழை மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக கூறியதற்கு இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

RIP

இந்த நிலையில், இயக்குநர் துரை உடல் நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

From around the web