சினிமாவில் மீண்டும் ரீ-என்டரி கொடுக்கும் நஸ்ரியா!! ரசிகர்கள் மகிழ்ச்சி!

 
Fahad-Nazriya

நடிகர் பஹத் பாசில் நடிக்கும் புதிய படத்தில் நடிகை நஸ்சரியா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013-ம் ஆண்டு வெளியான ‘நேரம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை நஸ்ரியா நசீம். அதனைத் தொடர்ந்து, ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

Fahad-Nazriya

நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார்.

இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்தது. சமீபத்தில் நானியுடன் அடடே சுந்தரா (Ante Sundaraniki) படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

Nazriya

இந்த நிலையில், இயக்குநர் ஜித்து மாதவன் நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து புதிய படத்தை இயக்குகிறார். இதில் நஸ்ரியா நாசிம் ஹீரோயின். இப்படத்திற்கு ஷமிர் தாஹிர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த அறிவிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பஹத் பாசில் படப்பிடிப்பு தொடங்கியது என பதிவிட்டுள்ளார்.

கடந்த 3-ம் தேதி ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளியான ‘ரோமாஞ்சம்’ படத்தை ரூ. 5 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாகி ரூ. 60 கோடியை தாண்டி வசூலித்து வருகிறது.

From around the web