கதாநாயகனாகும் லோகேஷ் கனகராஜ்! விரைவில் படப்பிடிப்பு!!

வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்த லோகேஷ் கனகராஜ் குறும்படங்கள் மூலம் கார்த்திக் சுப்பராஜ் கண்ணில் பட்டார். சினிமாவில் கவனம் செலுத்துங்க என்ற கார்த்திக் சுப்பராஜ் சொன்னதைக் கேட்டு அவருடைய தயாரிப்பில் குறும்படங்களும் இயக்கினார். தொடர்ந்து 2017ம் ஆண்டு மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார் லோகேஷ் கனகராஜ்.
ஒரே இரவில் நடக்கும் கதையுடன் அமைந்த மாநகரம் வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். இதுவும் இரவில் நடக்கும் கதை தான். இரண்டு வெற்றிப்படங்களைக் கொடுத்த லோகேஷ் அடுத்ததாக விஜய் - விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் என்ற மெகா ப்ளாக் பஸ்டர் படத்தைக் கொடுத்தார்.
அடுத்ததாக கமல் ஹாசனுக்கு மாபெரும் வெற்றிப்படமான விக்ரம் 2 படத்தை இயக்கி இருந்தார் லோகேஷ். பின்னர் விஜய் யுடன் மீண்டும் இணைந்து லியோ படமும் அதைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணைந்து கூலி படத்தையு இயக்கி வருகிறார்.
கூலி படம் முடிந்ததும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கதாநாயகனாக நடித்து முடித்ததும் இந்த ஆண்டு இறுதியில் கைதி 2 படத்தை இயக்க உள்ளார் லோகேஷ் கனகராஜ்.