Shooting ஆரம்பிக்காமலே நான் வரலன்னு சொல்லுறாரு.. TTF வாசன் ஆதங்கம்

 
Manjal Veeran

‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து டிடிஎஃப் வாசனை நீக்கியதாக இயக்குநர் செல்அம் அறிவித்திருக்கும் நிலையில், வீடியோ வெளியிட்டு டிடிஎஃப் வாசன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2கே கிட்ஸ்கள் மத்தியில் சமீபத்தில் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதிவேகமாக பைக்குகளை ஓட்டி, சிறுவர்களை கவர்ந்து வரும் டிடிஎஃப் வாசன் சாலை விதிகளை மீறிய புகாரின் பேரில் போலீசாரால் பலமுறை நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். 

யூடியூப் மூலம் பிரபலமான இவரை கதாநாயகனாக வைத்து செல்அம் என்ற இயக்குநர், ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தை இயக்க உள்ளதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் அப்படத்தில் இருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை இயக்குநர் செல்அம் தெரிவித்திருந்தார்.

TTF Vasan

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ அறிவிக்கப்படுவார்’ என்று குறிப்பிட்டிருந்த அப்படத்தின் இயக்குநர் செல்அம், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து நானும் வாசனும் பிரிந்துள்ளோம். இதுபற்றி இன்னும் அவரிடம் (வாசனிட) தகவல் தெரிவிக்கவில்லை. மற்றபடி தம்பி என்கிற உறவு அவருடன் எனக்கு தொடரும். இது ஒரு வாழ்வியல் படம். என்கூடவே என் ஹீரோ பயணிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். அது நடக்கவில்லை என்பது மட்டும்தான் இந்த முடிவுக்கு காரணம். வரும் அக்டோபர் 15 ஆம் தேதி புதிய கதாநாயகனை அறிமுகப்படுத்துகிறேன் என தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக டிடிஎஃப் வாசன் அவரது யூடியூம் சேனலில் விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “என்னிடம் இப்போது வரை மஞ்சள் வீரன் படத்தில் இருந்து நீக்கப்பட்ட தகவலை இயக்குநர் செல்அம் தெரிவிக்கவே இல்லை. நான் தொடர்புகொண்டாலும் அவர் பேசவே தயாராக இல்லை. என்னிடம் சொல்லியிருந்தால் நானே ஒத்துக்கொண்டு விலகியிருப்பேன். 

ஆனால் படப்பிடிப்பு நடத்தாமலேயே அதற்கு நான் வரவில்லை என்று நேரடியாக பத்திரிகையாளர்களிடம் கூறியது மிகப்பெரிய தவறு. அண்ணன் அண்ணன் என்று சொல்லிக்கொண்டு மலிவான விளம்பரத்திற்காக என்னை அவர் பயன்படுத்தியது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இதுபோலான ஒரு பச்சதுரோகத்தை நான் பார்த்ததே கிடையாது” என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web