கண்ணா லட்டு தின்ன ஆசையா? பவர் ஸ்டார் சீனிவாசனை அலேக்காக தூக்கிய டெல்லி போலீஸ்!

 
Power Star Power Star

கடன் வாங்கித் தருவதாகக் கூறி 5 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி பொருளாதாரத் துறை போலீஸ் மீண்டும் கைது செய்து டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளது

டெல்​லியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த தொழில​திபர் ஒரு​வர் நிறு​வனத்தை விரிவுபடுத்த ரூ.1,000 கோடி கடன் பெறு​வதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இது பற்றித் தெரிந்து கொண்ட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், கடன் வாங்​கித் தரு​வ​தாக அந்த தொழிலதிபரிடம் உறுதி அளித்​துள்​ளார். கமிஷன் தொகை​யாக ரூ.10 கோடியை கேட்ட  சீனி​வாசனுக்கு   முதல் கட்​ட​மாக ரூ.5 கோடியை தொழிலதிபர் வழங்​கிய​தாக கூறப்​படு​கிறது.

பணத்​தைப் பெற்​றுக் கொண்ட சீனி​வாசன், உறுதி அளித்​த​படி கடனை பெற்​றுக் கொடுக்​காமல் இழுத்​தடித்​துள்​ளார். மேலும், கமிஷ​னாக பெற்ற தொகை​யை​யும் திரும்ப கொடுக்​க​வில்​லை​யாம். இதனால், அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் இந்த பண மோசடி தொடர்​பாக டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரி​வில் சீனி​வாசன் மீது புகார் செய்​தார்

இதையடுத்து டெல்லி பொருளாதரரப் பிரிவு போலீ​ஸார்,சீனி​வாசன் மீது வழக்​குப் பதிவு செய்​து, அவரை 2013-ம் ஆண்டு கைது செய்​தனர். ஜாமீனில் வெளியே வந்த சீனி​வாசன், 2018-ம் ஆண்டு முதல் விசா​ரணை நடவடிக்​கை​களில் ஆஜரா​காமல் இருந்​துள்​ளார்.  டெல்லி பாட்​டி​யாலா நீதி​மன்​றம் நடிகர் சீனிவாசனை கைது செய்து நீதி​மன்​றத்தில் ஆஜர்​படுத்த உத்​தர​விட்டது.

சென்னை வந்த டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார், அண்​ணாநகர் கிழக்கு 4-வது தெரு​வில் உள்ள வீட்​டில் பவர் ஸ்டார் சீனி​வாசனை கைது செய்​து டெல்​லிக்கு அழைத்​துச் சென்​றுள்ளனர்.  சீனிவாசன் மீது சென்​னை​யிலும் இதே​போல் பல வழக்​கு​கள் உள்​ளது குறிப்பிடத் தக்கது.

From around the web