விஜய் பட இயக்குநரின் மகன் பெயர் என்ன தெரியுமா..? வைரலாகும் போட்டோ!!
![Atlee](https://a1tamilnews.com/static/c1e/client/82560/uploaded/bbf78ad40c1271f2a542819f209561a8.jpg)
பிரபல இயக்குநர் அட்லி - பிரியா தம்பதி முதன்முறையாக தனது மகனின் பெயரை அறிவித்துள்ளனர்.
பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லி. ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய இரு படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவர் திரைப்படம் இயக்குவதற்கு முன்பே இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘முகப்புத்தகம்’ என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார்.
அதன் பிறகு, தெறி, மெர்சல், பிகில் என பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். தற்போது பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணையும் படமான ‘ஜவான்’ செப்டம்பர் 7-ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதனிடையே சீரியல் நடிகை கிருஷ்ணபிரியா என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி அட்லி திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சரியாக 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் அட்லி தனது மனைவி கர்ப்பமாக உள்ளதை அறிவித்திருந்த நிலையில், கடந்த ஜனவரி 31-ம் தேதி ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அட்லியுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பதிலளித்த ஷாருக், “அட்லி ரொம்ப ஸ்மார்ட். கடினமாக உழைக்கக் கூடியவர். அவருக்கு மீர் என்ற அழகான குழந்தை உள்ளது. மேலும் பிரியா எனக்கு நல்ல உணவளித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Yes the name is MEER ❤️
— Priya Mohan (@priyaatlee) May 7, 2023
Very happy to be revealing our little angels name ❤️👼🏻 #meer #babyboy @Atlee_dir https://t.co/RuOb1EUSnP pic.twitter.com/3s2IOiKY76
இதனையடுத்து பிரியா அட்லி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் படத்தை பகிர்ந்து, “ஆமாம் எங்களது குழந்தையின் பெயர் மீர்” என்று முதன்முறையாக அறிவித்துள்ளார். இயக்குநர் அட்லியும் இதனைப் பகிர்ந்து அட்லி, “குழந்தைக்கு உங்களது அன்பும் ஆசிர்வாதமும் தேவை” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.