பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா.. அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட சூர்யா ஜோதிகா அச்சம்!

 
Akshay Kumar

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் அக்‌ஷய் குமார். இவர் ரஜினிகாந்த் நடித்த 2.O படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடத்திலும் கவனத்தை பெற்றார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான ஓஎம்ஜி -2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Akshay Kumar

இந்நிலையில், தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக் படமாக  உருவாகியுள்ள ‘சர்ஃபியா’ படத்தில் இவர் நடித்துள்ளார். இந்தப் படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் கிடைத்த அதே வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்கும் என்றும், விரைவில் இப்படம் 100 கோடி வசூலை அள்ளும் என்றும் கூறப்படுகிறது. 

Akshay Kumar

இந்த நிலையில் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும், ஆனந்த அம்பானி திருமணத்துக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

From around the web