பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணமா..? நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம்

 
Keerthi - Anirudh

பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என பரவிய தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மாறியவர். தமிழில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவர் நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும்  ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து விஜய்யுடன் பைரவா, சர்கார், விக்ரம் உடன் சாமி 2, விஷாலுடன் சண்டைக்கோழி 2 என டாப் ஹீரோக்களுடன் ரவுண்ட் கட்டினார். சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்த கீர்த்தி, உதயநிதியுடன் மாமன்னன் படத்தில் நடித்தார். மேலும், மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிஸியாக உள்ளார்.

Keerthy-Suresh

இதனிடையே அவரது திருமணம் குறித்து அடிக்கடி வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கேரள அரசியல் தலைவர் ஒருவரின் மகனை திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. 

பின்னர் இசையமைப்பாளர் அனிருத்தும், கீர்த்தி சுரேசும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்களை கிளப்பினர். அவர்கள் நண்பர்களாக பழகுவதாகவும், காதல் இல்லை என்றும் நெருக்கமானவர்கள் மறுத்தனர். கேரள தொழில் அதிபருடன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இதனை கீர்த்தி சுரேஷ் மறுத்தார்.

Keerthi Suresh

இந்த நிலையில் மீண்டும் இசையமைப்பாளர் அனிருத்துடன் திருமணம் என பரவிய தகவலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அனிருத்தும், கீர்த்தி சுரேசும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து கீர்த்தி சுரேஷ், திருமணம் தொடர்பாக பரவும் தகவல் தவறானது, அனிருத் தனக்கு நல்ல நண்பர் எனக் கூறியுள்ளார். தொடர்ந்து திருமணம் குறித்து திருமணம் நடக்கும் என்றும் பதிலளித்தார். பிரபல இசையமைப்பாளர் அனிருத்துடன் கீர்த்தி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் முன்னதாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

From around the web