பாரம்பரிய முறைப்படி கோலாகலமாக நடந்த அமலா பால் வளைகாப்பு.. வைரல் புகைப்படங்கள்

 
Amalapaul

குஜராத்தில பாரம்பரிய முறைப்படி நடிகை அமலா பாலுக்கு நேற்று வளைகாப்பு முடிந்திருக்கிறது.

2009-ல் வெளியான ‘நீலதாமரா’ படத்தின் மூலம் மலையாள சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதனைத் தொடர்ந்து, 2010-ல் வெளியான ‘வீரசேகரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின் சிந்து சமவெளி, மைனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் மலைவாழ் கிராமத்தில் வாழும் அழகிய பெண்ணாக இவர் வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து தெய்வத்திருமகள், தலைவா படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தெய்வத்திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது ஏ.எல்.விஜய் மற்றும் அமலாபால் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் 2014-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு மனமுவந்து பிரிவதாக இருவரும் அறிவித்து பிரிந்து விட்டனர். மலையாளம், தெலுங்கு, தமிழ் என நடித்துவரும் அமலாபால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

Amala Paul

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி அமலா பாலின் பிறந்தநாள் அன்று தன்னுடைய காதலன் ஜெகத் தேசாய் புரோபோஸ் செய்த, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட அவை படு வைரலானது. மேலும் தன்னுடைய காதலன் புரோபோஸ் செய்த ஒரே வாரத்தில் அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

அமலாபால் ஜெகத் தேசாய் ஜோடிக்கு திருமணமான இரண்டே மாதத்தில் அமலா பால் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூலம் அறிவித்தார். இயக்குநர் விஜயுடன் முதல் திருமணத் தோல்விக்குப் பின்பு தனக்குப் பிடித்த சரியான நபருடன் அமலா மணம் முடித்திருக்கிறார் என ரசிகர்கள் வாழ்த்தி வந்தனர்.

A post shared by Amala Paul (@amalapaul)

இந்நிலையில், நடிகை அமலா பாலுக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் வளைகாப்பு நேற்று நடந்திருக்கிறது. கணவர் ஜெகத் தேசாயுடன் இருக்கும் வளைகாப்பு நிகழ்ச்சியின் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் அமலாபாலுக்கு எட்டவாது மாதம் தொடங்க இருக்கும் நிலையில், அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி மகிழ்ந்து இருக்கின்றனர்.

From around the web