2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் நடிகை சமந்தா? ரசிகர்கள் வாழ்த்து!

 
Samantha

நடிகை சமந்தா ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார்.

Samantha

இவருக்கும் தெலுங்கு பட உலகத்தின் முக்கிய நட்சத்திரமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தானியாவிற்கும் 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் நடிப்பதை தொடர்ந்த சமந்தா, புஷ்பா படத்தில் இடம்பெற்ற ‘ஊ சொல்லறீயா மாமா’ பாடலில் ஒட்டுமொத்த க்ளாமரையும் இறக்கி ரசிகர்களை கிறங்கடிக்க வைத்தார். சுமூகமாக சென்ற இந்த காதல் ஜோடியின் வாழ்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சமந்தா நாக சைதன்யா 2022-ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் இந்த நோயிலிருந்து படிப்படியாக குணமடைந்த அவர், தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மயோசிட்டிஸ் நோய்க்காக மீண்டும் சிகிச்சை எடுத்து வருகிறார்.

Samantha

இந்த நிலையில் சமந்தா ஆதரவில்லாமல் இருக்கும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா தான் நடத்தி வரும் பிரதியுஷா என்ற தொண்டு நிறுவனம் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web