சாண்டா கிளாஸ் ஆக மாறிய நடிகை ரோஜா.. குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்!

 
Roja

ஆந்திராவில் சாண்டா கிளாஸ் வேடமணிந்த அமைச்சர் ரோஜா வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு கிப்ட் வழங்கினார்.

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் 51-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜயவாடாவில் நடிகை ரோஜா ஸ்கூட்டரில் ஊர்வலம் சென்றார். பின்னர் பாம்பே காலனி பகுதியில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்ற ரோஜா, போலியோவால் பாதிக்கப்பட்ட காலணிகள் தைக்கும் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்று பரிசுகள் வழங்கினார்.

விஜயவாடாவில் பாம்பே காலனி பகுதியில் வசித்து வருபவர் மாற்றுத்திறனாளி நாகராஜ் . இவர் சாலை ஓரத்தில் செருப்பு விற்கும் கடை வைத்துள்ளார். இவருக்கு உடல் நிலை சரியில்லாத மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு 2 கால்களுமே கிடையாது. மனைவி சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக  படுத்த படுக்கையாய் இருக்கிறார்.

Roja

அரசின் மாதாந்திர பென்ஷன் தொகை ரூ. 3,000 தான் இவர்களது வருமானமே. இதில் தான் 2 பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க படாத பாடு பட்டு வருகிறார் நாகராஜ். இவர்களின் அவல நிலை குறித்து அறிந்து கொண்ட நடிகை ரோஜா அவர்களுக்கு சர்ப்ரைசாக உதவி செய்ய முடிவெடுத்தார். அதன்படி  சாண்டா கிளாஸ் வேடமனிந்து விஜயவாடா வாம்பே காலனியில் உள்ள நாகராஜுன் வீட்டுக்கு  சென்றார்.

கிறிஸ்தவரான நாகராஜ் தனது வீட்டுக்கு சாண்டா கிளாஸ் வந்ததை கண்டு நெகிழ்ச்சி அடைந்தார்.   சாண்டா கிளாஸாக வந்தது அமைச்சர் ரோஜா என்பதை தெரிந்து கொண்ட அவர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டார். நாகராஜ் குடும்பத்துடன் கொண்டு சென்ற கேக்கை வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். அவரின் பெண் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதோடு குழந்தைகளின் படிப்புக்காக ரூ. 2 லட்சம் காசோலையையும் வழங்கினார்.  


ரோஜா தனது வீட்டுக்கு வந்து சென்றது குறித்து நாகராஜ் கூறுகையில், “நானும் என் மனைவியும் எப்போது மரணம் என்ற நிலையில் தான் எங்கள் உடல்நிலை உள்ளது. எனக்கும், மனைவிக்கும் கிட்னி பிரச்சனை. இன்று மேரி மாதாவே வீட்டுக்கு வந்தது போல ரோஜா வந்து எங்களை ஆசிர்வதித்தார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

From around the web