மீண்டும் ஒரு டீப் ஃபேக் வீடியோ.. ராஷ்மிக்காவை விடாமல் துரத்தும் AI.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Rashmika

நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து டீப் ஃபேக் வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

2016-ல் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார். 2021-ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி திரையுலகிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். இவரது நடிப்பில் அனிமல் என்ற இந்தி படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.

Rashmika Mandanna

இந்த நிலையில், கடந்த மாதம் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். அது ராஷ்மிகா மந்தனாவே இல்லை என்பதும், அது டீப் ஃபேக் செய்யப்பட்ட இந்திய வம்சாவளியான இங்கிலாந்தில் வசிக்கும் யுடியூவரின் வீடியோ என்பதும் தெரியவந்தது. அப்போது இது குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா மனமுடைந்து உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

அதை தொடர்ந்து நடிகை கத்ரினா கைஃப்-ன் டீப் ஃபேக் செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே இதுபோன்ற டீப் ஃபேக் செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. எனினும் இந்த டீப் ஃபேக் சிக்கல் தீர்ந்த பாடில்லை. ராஷ்மிகா மந்தனாவை தொடர்ந்து, கத்ரினா கைஃப், கஜோல், ஆலியா பாட் என பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.


இந்நிலையில் தற்போது இணையத்தில் ராஷ்மிக்காவை சித்தரிக்கும் மற்றொரு டீப் ஃபேக் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதனை கண்ட ராஷ்மிக்காவின் ரசிகர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர். பெண்களின் பாதுகாப்பு என்பது தொடர் சிக்கலில் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர்.

உடனடியாக இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு கொண்டுவரவேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த ஆபாச வீடியோவை வெளியிட்ட நபரை தற்போது சைபர் போலீசார் தேடி வருகின்றனர். இந்த புதிய சிக்கல் காரணமாக நடிகைகள் பலரும் இப்பொது கடும் அச்சத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.

From around the web