முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறது பொன்னியின் செல்வன்-2..?

 
PS

தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால் பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் முன்கூட்டியே வெளியிட முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் படைப்பை அடிப்படையாக கொண்டு இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

PS

முதல் பாகத்தை எடுத்தபோதே, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பும் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டது. இரண்டு பாகங்களுமே சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகி இருந்ததாகவும், அந்த தொகை முழுவதும் முதல் பாகத்திலேயே கிடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

முதல் பாகம் வசூல் தியேட்டர் வெளியீட்டில் மட்டுமே ரூ.500 கோடியை தாண்டி உள்ளது. முதல் பாகத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.125 கோடிக்கு மேல் விலைபோய் அந்த தொகை லாபமாக வந்துள்ளது என்கின்றனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வசூல் முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் இருக்கும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். 

PS1

இரண்டாம் பாகத்துக்கான டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் சென்னை மற்றும் மும்பை ஸ்டுடியோக்களில் விறுவிறுப்பாக நடந்து முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாம் பாகத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கு ஓரிரு மாதங்கள் முன்கூட்டியே வெளியிட முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web