பிரபல பழம்பெரும் நடிகர் மாரடைப்பால் மரணம்!! திரையுலகினர் அதிர்ச்சி

 
logithasva

கன்னட திரையுலகின் மூத்த நடிகர் லோஹிதாஸ்வா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 80. 

துமகூரு தொண்டகரேவை சேர்ந்த லோஹிதாஸ்வா, திரைப்பட நடிகர் மட்டுமின்றி, 100-க்குப் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இவர் ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். அபிமன்யூ, ஏ.கே.47, அவதார புருஷா, சின்னா, ஹொச நீரு, கஜேந்திரா, விஸ்வா, பிரதாப், போலீஸ் லாக்கப், ரெடிமேட் கண்டா, ஸ்நேகா லோகா, சுந்தரகாண்டா, சிம்ஹத மரி, மூரு ஜன்மா, டைம் பாம் உட்பட 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

logithasva family

டிவி தொடர்களிலும் நடித்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த இவர், பெங்களூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு, அக்டோபர் 10-ம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே குமாரசாமி லே அவுட்டில் உள்ள சாகர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முனுதினம் மதியம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது இறப்பிற்கு, முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட முக்கிய பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RIP

லோஹிதாஸ்வா உடல், குமாரசாமி லே அவுட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின், சொந்த கிராமத்தில் இறுதி சடங்கு நடத்தப்பட்டதாக அவரது மகன் சரத் தெரிவித்தார்.

இவரது மகன் சரத் லோஹிதாஸ்வா தமிழில் எதிர்நீச்சல், பாண்டியநாடு, காஷ்மோரா, வேலைக்காரன், கருப்பன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

From around the web