உள்ளே 743 வெளியே 987 – இது தமிழ்நாட்டு கொரோனா கணக்கு!!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று குணமடைந்து 987 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதே வேளையில் 743 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 11 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆண்கள் 442, பெண்கள் 301 என பாதிக்கப்பட்ட 743 பேர்களில் 83 பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள். 52 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்
 

உள்ளே 743 வெளியே 987 – இது தமிழ்நாட்டு கொரோனா கணக்கு!!மிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று குணமடைந்து 987 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதே வேளையில் 743 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 191 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மட்டும் மொத்தம் 11 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. ஆண்கள் 442, பெண்கள் 301 என பாதிக்கப்பட்ட 743 பேர்களில் 83 பேர் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் ஆவார்கள். 52 பேர் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 

சென்னையில் மட்டும் நேற்று 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதையும் சேர்த்து, தமிழகத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 882 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரையிலும் 2,823 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, 7 ஆயிரத்து 219 பேருக்கு தமிழ்நாடு முழுவதும் சிகிச்சை அளிளிக்கப்பட்டு வருகிறது.

பிற மாநிலங்களை விட உயிரிழப்பு தமிழ்நாட்டில் குறைவு என்றாலும் தற்போது 87 ஆக உயர்ந்து விட்டது. நேற்று மட்டும் சென்னையில் 2 பேர், திருவள்ளூரில் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்

 

 

மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், தற்போது 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று உள்ளது. மீதி 25 மாவட்டங்களில் தொற்று இல்லை.

A1TamilNews.com

From around the web