இபிஎஸ் 2.0 – லண்டனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அசத்தல்!
லண்டன்: மூன்று நாடுகள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டனில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
முதன் முதலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோர்ட் சூட்டில், லண்டனில் அசத்தலாக நடந்து வந்தார். முதல் நாள் பயணத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
International Skill Development Corporation நிறுவனத்துடன் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பணி மேம்பாட்டுக்கான செயல்திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. London School of Hygiene and Tropical Medicine நிறுவனத்துடன், டெங்கு, மலேரியா நோய்த்தடுப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் கையெழுத்திட்டார்.
லண்டன் கிங்க்ஸ் மருத்துவமனையின் கிளைகளை தமிழகத்தில் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. தமிழ்நாடு ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்துவதற்காக, லண்டன் ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்குச் சென்று, அந்த மையத்தின் இயக்கம், செயல்பாடுகள் பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.
முதல்வருடன் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், முதலமைச்சரின் செயலாளர்கள் எம்.சாய்குமார், எஸ்.விஜயகுமார், பி.செந்தில்குமார் உடன் இருந்தார்கள்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கோட் – சூட் உடை தான் லண்டன் பயணத்தின் ஹைலைட்டாக இருந்தது. இபிஎஸ் 2.0 பராக்!.
– வணக்கம் இந்தியா
முதல்வரின் பயணத் திட்டம் தொடர்பான செய்தி: