தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கலாம்! உச்ச நீதிமன்றம் அதிரடி !
தமிழகம் முழுவதும் மூடப்பட வேண்டுமென பொதுநல வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது.
ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணையில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் எனவும், அரசின் கொள்கை ரீதியானது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான இடைக்காலத் தடை தொடரும் என்றும் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் செயல்பட எந்தவிதத் தடையும் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.