மனைவி தூக்கிட்டு தற்கொலை... துக்கம் தாளாமல் மாடியில் இருந்து குதித்த கணவன்!!

 

மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துக்கம் தாங்காமல் கணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் பா.முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுஜாதா. இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணமாகிய நிலையில், அவர்கள் பெங்களூருவில் வசித்து வருகின்றனர்.

புருஷோத்தமனும், சுஜாதாவும் பர்கூரில் வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த சுஜாதா, எந்த சிகிச்சையிலும் வயிற்று வலி குணமாகாததால் ஆறுதலுக்காக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தாய்வீட்டில் இருந்தவரை பர்கூர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார் புருஷோத்தமன். மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்ட வந்த பின்னர், சுஜாதாவை பர்கூர் காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள காவலர் குடியிருப்பில் தங்க வைத்துவிட்டு, காவலநிலையம் சென்று வேலைகளை கவனித்து வந்துள்ளார்.

வேலை முடிந்து மனைவியை தாய் வீட்டுக்கு அழைத்துசெல்ல, அறைக்கு சென்றபோது, அங்கே மனைவி தூக்கில் தொங்கியது கண்டுஅதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து சுஜாதாவின் உடலை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவி தற்கொலை செய்துகொண்டதால் மனமுடைந்து போயிருந்த புருஷோத்தமன், இன்று அதிகாலை பா.முத்தம்பட்டி வீட்டின் மாடியில் இருந்துகுதித்து தற்கொலை செய்து கொண்டார்.