அதிர்ச்சி! தொல்.திருமாவளவனின் சகோதரி கொரோனாவிற்கு பலியான பரிதாபம்!
இது வரை தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 2,68,285பேர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 பேர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் சில நாட்களாக சென்னையில் பாதிப்பு குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பாரபட்சமின்றி கொரோனா தொற்று பரவி வருகிறது.
அந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் சகோதரி பானுமதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் சென்னையில் நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.