தமிழர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை… இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உருக்கம்!
இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோத்தபய ராஜபக்சேவுக்கு இந்திய பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக் கூறினார். இதையடுத்து இன்று காலை இலங்கையின் 7வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட கோத்தபய ராஜபக்சே உரையாற்றினார். தனது உரையில், தமிழர்கள் எனக்கு வாக்கு அளிப்பர்கள் என்று நினைத்தேன். ஆனால் தமிழர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருப்பினும் அவர்களையும் சமமாகவே பார்க்கிறேன் என்று பேசினார். மேலும், இலங்கையை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு முழு மூச்சுடன்
Nov 18, 2019, 15:33 IST
தனது உரையில், தமிழர்கள் எனக்கு வாக்கு அளிப்பர்கள் என்று நினைத்தேன். ஆனால் தமிழர்கள் எனக்கு வாக்களிக்கவில்லை. இருப்பினும் அவர்களையும் சமமாகவே பார்க்கிறேன் என்று பேசினார். மேலும், இலங்கையை ஊழல் இல்லாத நாடாக மாற்றுவதற்கு முழு மூச்சுடன் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.
முன்னதாக கடும் போட்டிக்கு இடையே 52.25 சதவிகித வாக்குகள் பெற்று கோத்தபய ராஜபக்சே அதிபராக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.