உயிரைப் பறித்த மாணவர்களின் சண்டை! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு!!

தேனி: இடைவேளை நேரத்தில் விளையாட்டாக மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டை, ஒரு மாணவரின் உயிரையே பறித்திருக்கிறது. பள்ளி மாணவர் இருவர், விளையாட்டாக போட்டுக்கொண்ட சண்டை, உயிர்ப் பலியில் முடிந்திருக்கிறது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 12 வகுப்பு படித்து வந்தார் திருமால். மதிய உணவுக்குப் பின் மீண்டும் வகுப்பறைக்குச் சென்ற திருமால், தனது சக நண்பர் ஒருவருடன் விளையாடத் தொடங்கியுள்ளார். இருவரும், ஒருவரை ஒருவர் கிழே தள்ளிவிட்டு விளையாடியதாகத் தெரிகிறது. அதில் எதிர்பாராதவிதமாக அந்த மாணவன்
 

தேனி:  இடைவேளை நேரத்தில் விளையாட்டாக மாணவர்களிடையே ஏற்பட்ட சண்டை, ஒரு மாணவரின் உயிரையே பறித்திருக்கிறது.

பள்ளி மாணவர் இருவர், விளையாட்டாக போட்டுக்கொண்ட சண்டை, உயிர்ப் பலியில் முடிந்திருக்கிறது. தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 12 வகுப்பு படித்து வந்தார் திருமால். மதிய உணவுக்குப் பின் மீண்டும் வகுப்பறைக்குச் சென்ற திருமால், தனது சக நண்‌பர் ஒருவருடன் விளையாடத் தொடங்கியுள்ளார்.

இருவரும், ஒருவரை ஒருவர் கிழே தள்ளிவிட்டு விளையாடியதாகத் தெரிகிறது. அதில் எதிர்பாராதவிதமாக அந்த மாணவன் தாக்கியதில், சுயநினைவை இழந்துவிட்டார் திருமால். பதற்றமடைந்த பள்ளி நிர்வாகத்தினர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், வழியிலேயே திருமாலின் உயிர் பிரிந்துவிட்டது.

இந்த அதிர்ச்சித் தகவலை அறிந்து ஆவேசமடைந்த திருமாலின் உறவினர்கள், அல்லிநகரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையை வலியுறுத்திய அவர்கள், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

அதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர் உயிரிழந்ததை அடுத்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட மாணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.