நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 

கனமழை காரணமாக நெல்லையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்திலும் கனமழையானது விடாமல் பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.