ஊரடங்கு மீறப்பட்ட வழக்குகள் மூலம் தமிழகத்தில் ரூ.8.36 கோடி அபராதம் வசூல்!முதலமைச்சர் எடப்பாடி!
அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகளை செலுத்த 3 மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறியவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டும் ரூ. 8.36 கோடி.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மக்களுக்கு வீடு,வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களுடன் இணைந்து தமிழக அரசு சார்பில் அம்மா உணவகம் மூலம் தினமும் 7 லட்சம் பேருக்கு மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது என தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.