இமயமலைக்குப் புறப்பட்டார் ரஜினிகாந்த்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்திற்கு மகள் ஐஸ்வர்யாவுடன் வந்தார். 90களின் பிற்பகுதியிலிருந்தே ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். உடல்நலம் சரியில்லாமல் போய் குணமடைந்த பிறகு நடித்த ஓரிரு படங்களுக்குப் பின் இந்த வழக்கத்தை கடைப் பிடிக்கவில்லை. காலா படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இமயமலைக்குச் செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார். இமயமலையின் சுத்தமான காற்று, நீர், அரோகிகள் என்றழைக்கப்படும் முற்றும் துறந்த
 

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை இமயமலைக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னை விமான நிலையத்திற்கு மகள் ஐஸ்வர்யாவுடன் வந்தார்.

90களின் பிற்பகுதியிலிருந்தே ஒவ்வொரு படம் முடிந்ததும் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த். உடல்நலம் சரியில்லாமல் போய் குணமடைந்த பிறகு நடித்த ஓரிரு படங்களுக்குப் பின் இந்த வழக்கத்தை கடைப் பிடிக்கவில்லை.

காலா படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் இமயமலைக்குச் செல்லும் வழக்கத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளார். இமயமலையின் சுத்தமான காற்று, நீர், அரோகிகள் என்றழைக்கப்படும் முற்றும் துறந்த சன்னியாசிகளிடம் பேச்சு என முற்றிலும் புதுமையான புத்துணர்ச்சியூட்டும் அனுபவம் கிடைக்கும் என்று முன்னர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். அங்கே சென்று வரும் போது உடலுக்கு முழு எனர்ஜி கிடைக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தர்பார் படப்பிடிப்பு முடிந்து அடுத்ததாக சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படமும் அறிவித்தாகிவிட்டது. தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

தன்னை புதுப்பித்துக்கொள்ள புத்துணர்ச்சியோடு புதுப்படத்தில் நடிப்பதற்காக, மீண்டும் ஒரு இமயமலைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

– வணக்கம் இந்தியா