ஆர்.எஸ்.பாரதி கைது தலித் அரசியலுக்கும் எதிரானது!!
இச்சம்பவம் திமுகவிற்கு மட்டுமல்ல மைய நீரோட்டத்தில் கலக்க முனையும் தலித் அரசியலுக்கும் எதிரானது.
தமிழ்நாட்டின் முதன்மையான சமூகநீதி இயக்கத்தின் அமைப்பு செயலாளரை அரசியல் உள்நோக்கத்துடன் கைது செய்திருப்பது மிகத்தவறானது. கடும் கண்டணத்திற்கு உரியது.
வாய்த்தவறி விழுந்த வார்த்தை பிரயோகத்திற்காக ஆர்.எஸ்.பாரதி அவர்கள் கைது. நேரடியாக செறுப்பை மாட்டிவிட சொல்லி வெறுப்பைக் கொட்டிய திண்டுக்கல் சீனுவாசன் கைதில்லை.
இப்பவாது அறிவுள்ளோர் புரிந்துகொள்ள வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பயன்பாடு, எல்லைகளை பெரும்பாலும் முடிவு செய்வது ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கத்தினருமே.
– கோபிநாத் குபேந்திரன்