இன்று முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்!தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கும் நேரத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று முதல் சென்னை உட்பட ரூ.10,000க்கும் குறைவான வருமானம் உள்ள அனைத்து சிறிய வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையை பொறுத்த வரை மாநகராட்சி ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமும் அனுமதி பெற்று திறக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ள்து.