உதயநிதிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !
பல்வேறு தளங்களிலிருந்து அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டுகள் குவிந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி இதை விமர்சித்து டுவீட் போட்டு இருந்தார். அதில் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி சர்க்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள். திருட்டு ரயில் ஏறி சென்னை வந்தவர்கள். சட்டத்தையும், சமூகத்தையும் ஏமாற்றி செல்வ செழிப்பானவர்கள். எனவே இதை குறை கூறும் தகுதி உதயநிதிக்கு கிடையாது.
தமிழர்களின் வளர்ச்சிக்காகவும், தமிழகத்தின் நன்மைக்காகவும் தன் வாழ்க்கையை தியாகம் செய்து தமிழ் மக்களின் உரிமைக்காகவும் உரிமைக்குரல் கொடுத்த அம்மா ஜெயலலிதாவின் பெயரை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சூட்டியது, தமிழக மக்களின் தீராக ஏக்கத்தை வெளிப்படுத்தியது என விளக்கம் அளித்துள்ளார்.