தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

 

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு மேலும் வழுவடைந்து வட தமிழ்நாடு நோக்கி நகரக்கூடும். வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வரும் 11-ம் தேதி தமிழ்நாடு அருகே வரும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.