3 மாதங்களுக்கு வாடகை கேட்டு ஹவுஸ் ஓனர்கள் தொந்தரவு செய்யக் கூடாது! உயர் நீதிமன்றத்தில் மனு !
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என மார்ச் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் தற்போது மேலும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு 3 மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்க வேண்டும்
Jun 4, 2020, 18:30 IST
வாடகைக்கு குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர் ஒரு மாதத்திற்கு வாடகை வசூலிக்கக் கூடாது என மார்ச் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்தில் தற்போது மேலும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் மூன்று மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநலவழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு 3 மாதங்களுக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.