வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாத ஓட்டல் உரிமையாளர் கடத்தல்

சென்னையில், வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி கட்டாததால் ஓட்டல் அதிபரை கடத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை நொளம்பூரை சேர்ந்த சக்தி முருகன் என்பவர், சென்னை பல்லாவரத்தில் விடுதி நடத்தி வருகிறார். இவர், சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் 50 லட்சம் ரூபாயை, 5 சதவீத வட்டிக்கு கடனாக வாங்கி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டி கட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சக்தி முருகன் முறையாக
 

 

 

சென்னையில், வாங்கிய கடனுக்கு முறையாக வட்டி கட்டாததால் ஓட்டல் அதிபரை கடத்திய நபரை காவல்துறையினர் ‌‌கைது செய்துள்ளனர்.

சென்னை நொளம்பூரை சேர்ந்த சக்தி முருகன் என்பவர், சென்னை பல்லாவரத்தில் விடுதி ‌நடத்தி வருகிறார். இவர், சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த பிரபாகர் என்பவரிடம் 50 லட்சம் ரூபாயை, 5 சதவீத வட்டிக்கு கடனாக வாங்கி, மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வட்டி கட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக ‌சக்தி முருகன் முறையாக வட்டி கட்டாததால், ஆத்திரமடைந்த பிரபாகர், சக்தி முருகனை ஆட்டோவில் கடத்தி சென்று அடித்துள்ளார்.

அப்போது அவரின் கூச்சல் சத்தம் கேட்டு பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்து‌‌றை சக்தி முருகனை மீட்டனர். அதைத்தொடர்ந்து, பிரபாகரை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி ‌வருகின்றனர்.

https://www.A1TamilNews.com