சூறைக் காற்று வீசக்கூடும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
அந்த வகையில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடலோர மாவட்டங்கள் மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும். அதே நேரம் சூறாவளி காற்றும் வீசும் வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் மன்னார் வளைகுடா தென்கிழக்கு மற்றும் மத்திய அரபிக்கடல், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.