லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடிய திமுக ஒன்றிய கவுன்சிலர்! காவல்துறை அதிரடி கைது!

தமிழகத்தில் கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக பல்வேறு சட்டவிரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் சிறுகடவாக்கோட்டை பொன்னமங்கலம் பகுதியில் ஆவுடையார்கோயிலில் திமுக ஒன்றியக் கவுன்சிலர் பொன்பேத்தி சுந்தரபாண்டியன் . இவருக்கு அப்பகுதியில் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இங்கு இரவுநேரங்களில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில்,காவல்துறை புகார் கூறப்பட்ட தென்னந்தோப்புகளுக்குள் ரகசிய சோதனை நடத்தியது இதில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது. போலீசை கண்டதும்
 

மிழகத்தில் கொரோனாவால் அறிவிக்கப்பட்டிருக்கும் தொடர் ஊரடங்கு காரணமாக பல்வேறு சட்டவிரோத செயல்களும் அதிகரித்து வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் சிறுகடவாக்கோட்டை பொன்னமங்கலம் பகுதியில் ஆவுடையார்கோயிலில் திமுக ஒன்றியக் கவுன்சிலர் பொன்பேத்தி சுந்தரபாண்டியன் .

இவருக்கு அப்பகுதியில் சொந்தமான தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. இங்கு இரவுநேரங்களில் மிகப்பெரிய அளவில் சூதாட்டம் நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில்,காவல்துறை புகார் கூறப்பட்ட தென்னந்தோப்புகளுக்குள் ரகசிய சோதனை நடத்தியது இதில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்றது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

போலீசை கண்டதும் தப்பி ஓட முயன்றவர்களை காவல்துறை மடக்கிப் பிடித்தது. இதில் தி.மு.க ஒன்றியக் கவுன்சிலர் சுந்தரபாண்டியன் , வெங்கடேசன் , முத்து, பஷீர் அகமது, பக்ருதீன், விஜயகுமார், நீலகண்டன் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சூதாட்டத்திற்காக வைத்திருந்த ரூ.13.6லட்ச ரூபாய் பணத்தையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com