மதுரையில் ஜெயலலிதா சிலை… திமுகவினர் எதிர்ப்பு!

மதுரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலை அமைப்பதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை கே.கே.நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு எதிரே ஜெயலலிதாவின் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து வருகின்றன. இன்று ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினமாகும். இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் திமுகவினர் மதுரை மாவட்ட் ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர். நீதிமன்றத்திற்கு எதிரே ஜெயலலிதாவின் சிலையை நிறுவுவதால் போக்கு வரத்து இடைஞ்சல் ஏற்படும். அங்கே ஏற்கனவே எம்.ஜி.ஆர்
 

துரையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச் சிலை அமைப்பதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மதுரை கே.கே.நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு எதிரே ஜெயலலிதாவின் சிலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் சில மாதங்களாக நடந்து வருகின்றன. இன்று ஜெயலலிதாவின் மூன்றாவது ஆண்டு நினைவு தினமாகும்.

இந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தலைமையில் திமுகவினர் மதுரை மாவட்ட் ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.  நீதிமன்றத்திற்கு எதிரே ஜெயலலிதாவின் சிலையை நிறுவுவதால் போக்கு வரத்து இடைஞ்சல் ஏற்படும். அங்கே ஏற்கனவே எம்.ஜி.ஆர் சிலை இருக்கிறது. ஜெயலலிதாவின் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்திற்குச் செல்வோம் என்று திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

https://www.A1TamilNews.com